Tuesday 19 March 2013

பதிவுகளை காப்பி அடிப்பதை தடுக்க

இணையத்தின் வளர்ச்சி காரணமாக கிட்டத்தட்ட அனைத்து விசயங்களும் எளிதாகிவிட்டன. நம்முடைய கருத்துக்களை மற்றவர்களிடம் பகிர்வதும் எளிதாகிவிட்டது. அதே சமயம் மற்றவர்கள் பகிர்ந்தவற்றை காப்பி அடிப்பது அல்லது காப்பி செய்வதும் எளிதாகிவிட்டது. தற்போது பல பதிவர்களுக்கு வருத்தத்தை கொடுப்பது பதிவு திருட்டு.

ஒரு பதிவை பகிர்வதற்கும், திருடுவதற்கும் ஒரே வித்தியாசம் தான். பதிவின் எழுத்தாளரிடம் அனுமதி பெற்று பகிர்ந்தால் அது பகிர்வு. அனுமதி இல்லாமலும், எழுதியவரின் பெயரை, ப்ளாக்கை குறிப்பிடாமலும் பகிர்ந்தால் அது திருட்டு. தற்போது இணையத்தின் வளர்ச்சிக் காரணமாக நமது பதிவுகள் Copy செய்யப்படுவதை முற்றிலுமாக தடுக்க இயலாது. ஆனால், அதை தடுப்பதற்கு சில வழிகளை செய்யலாம். அதில் ஒன்று, நமது பதிவுகள் காப்பி அடிக்கப்படுவதை தடுக்க,Copy செய்யும் முறையை முடக்க வேண்டும்(Disable Copy and Paste).

அவ்வாறு செய்ய:
1. முதலில் Blogger Dashboard => Template => Backup/Restore Template என்ற பகுதிக்கு சென்று, Download Full Template என்பதை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.


2. பிறகு அதே பக்கத்தில் Edit Html பகுதிக்கு சென்று, அங்கு

<body>
என்ற Code-ஐ தேடி, அதனை பின்வருமாறு மாற்றவும்.
<body bgcolor="#FFFFFF" ondragstart="return false" onselectstart="return false">



3. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.


குறிப்பு: சில டெம்ப்ளேட்களில் Body Tag-ல் வேறு சிலவும் சேர்ந்திருக்கும்.
 உதாரணத்திற்கு,
<body expr:class='&quot;loading&quot; + data:blog.mobileClass'>

அது போன்று இருந்தால், அந்த code-ல் இறுதியில் > என்பதற்கு முன் ஒரு இடைவெளி விட்டு
bgcolor="#FFFFFF" ondragstart="return false" onselectstart="return false"
என்பதை சேர்க்கவும்.


குறைகள்: இப்படி செய்வதால், வாசகர்கள் பதிவில் நாம் சொன்னதை மேற்கோள் காட்டவும் காப்பி செய்ய முடியாது. :( :( :(

ஆனாலும் , நமது பதிவுகள் காப்பி செய்யப்படுவதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. அவற்றை சொல்ல எனக்கு விருப்பமில்லை.


Reference: http://www.hypergurl.com/

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz