Wednesday 24 April 2013

உயிர் காக்க 108 அமரர் ஊர்திக்கு 155377

தமிழகம் முழுவதும் அவசர உதவிக்கு என ஒரு பிரதான நெட்வொர்க் 108 ஆம்புலன்ஸ் சேவை இயங்கி வருகிறது. இந்த 108 ன் மகத்தான சேவையை  சொற்களால் அடுக்க இயலாது. விபத்துகள், அவசர கால/காவல் உதவி,  தீயணைப்பு வாகனம் போன்றவையை தொடர்பு கொள்ள வேண்டிய 108 எண் அனைவருக்கும் அத்துபடி ஆகிவிட்டது. சரி உயிர் காக்கத் தான் 108, அமரர் ஊர்திக்கு என்ன எண்ணை அழைப்பீர். 
உயிர் உள்ள ஒருவருக்கு அவசர உதவி எனில் அவரை காப்பாற்ற எத்தனையோ வண்டிகள் துணை நிற்கும். ஆனால் உயிர் அற்ற பிணத்தை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு எடுத்து செல்ல எந்த டாக்ஸி டிரைவரும் வர மாட்டான். நம்மை சூழ்ந்திருக்கும் மூட நம்பிக்கைகள் அப்படி. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் உயிர் இயக்கம் உடல்களை வீட்டிற்கு கொண்டு செல்ல சுகாதாரத் துறை ரெட் கிராஸ் கூட்டமைப்போடு இணைந்து அமரர் ஊர்தி சேவையை வயங்கி வருகிறது அவற்றை தொடர்புகொள்ள பிஎஸ்என்எல்-லில் இருந்து 155377 என்ற எண்ணிற்கும் மற்றவர்கள் 044-28888180 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz